1)நமது அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு    ஜனவரி 26, 1950

2)முழு சுயராஜ் (பூரண சுயராஜ்யம்) என்ற முழக்கம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் முழங்கப்பட்டது - 1929 (லாகூர் காங்கிரஸ் மாநாடு)

3) முழு சுதந்திர தினமாக முதன் முதலில் கொண்டாடப்பட்ட தினம் -ஜனவரி 26,1930

4)அரசமைப்பு நிர்ணய மன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. - 1946

5)அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திர பிரசாத்

6)அரசமைப்பு நிர்ணய மன்றம் எத்தனை உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. 389

7)அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15

8) அரசமைப்பு சட்ட வரைவுக் குழு மொத்த உறுப்பினர்கள் 7

(பி.ஆர்.அம்பேத்கர்,என்.கோபாலசாமி.கே.எம்.முன்ஷி, சையது முகம்மது சாதுல்லா, என். மாதவ் ராவ், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி) 

9)அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர்

10) இந்திய அரசியலமைப்பு மன்றத்தின் ஆலோசகர் பி. என். ராவ்

11) இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை  அம்பேத்கர்

12) இந்திய அரசமைப்பு சட்டம் எத்தனை நாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.  60 நாடுகள்

13) அரசமைப்பு சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு எத்தனை திருத்தங்கள் செய்யப்பட்டன. 2000

14) அரசமைப்பு சட்டம் எத்தனை நாட்களில் எழுதி முடிக்கப்பட்டது

2ஆண்டுகள் 11மாதங்கள் 18 நாட்கள்

15) அரசியலமைப்பு சட்டம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட தினம் வம்பர் 26, 1949

16) அரசியலமைப்பு சட்டம் உருவாக்க செலவிடப்பட்ட மொத்த தொகை 64 இலட்சம் ரூபாய்

17) இந்தியருக்கான நீதி, தன் செயல் உரிமை, சமத்துவத்தை உறுதி செய்தல், சகோதரத்துவத்தை வலியுறுத்துவது.   முகப்புரை

18) இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை, மக்களாட்சி, குடியரசு என்று வரையறை செய்வது.  முகப்புரை

19) இந்திய அரசமைப்பு சட்டத்திற்கான அறிமுகம்   முகப்புரை

20) ஒரு நாட்டின் உச்ச நிலை அதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.  இறையாண்மை

21) இந்திய அரசு எதன் வழியே ஆளப்படுகிறது.  நாடாளுமன்றம்

22) ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக தேவையான உரிமை  அடிப்படை உரிமை

23) அடிப்படை உரிமைகளில் எத்தனை தலைப்புகள் உள்ளன  6

24) அரசியலமைப்பு சட்டம் உருவான போது இருந்த விதிகள், பகுதிகள், அட்டவணைகள்   395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள்

(தற்போது உள்ளவை 448 உறுப்புகள் 25 பகுதிகள் 12 அட்டவணைகள்)

25) அரசியலமைப்பு சட்டம் இது வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 16.09.2016 வரை 101 முறை திருத்தப்பட்டுள்ளது

26) மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்  மக்களாட்சி

27) அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் சமமாக நடத்துதல்

மதசார்பின்மை

28) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் எங்கு  பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் ஹலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில்

29) இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம்    டிசம்பர் 9 , 1946

30) அனைவருக்கும் கல்வி உரிமை நாள் 

ஏப்ரல் 1




































Post a Comment

Thank you